Sunday, November 11, 2012

Free Angela & All Political Prisoners:


37வது ரொறொன்டோ சர்வதேச படவிழாவில் இடம்பெற்ற இன்னுமொரு முழுநீள விவரணத்திரைப்படம் “Free Angela & All Political Prisoners”.
தற்போதைய எமது நாட்டு நிலமைக்கும் இ;வ்விரணப்படத்திற்கும் நிறம்பவே ஒற்றுமைகளுள்ளன. அரசியல் மறுப்புரூபவ் எதிர்ப்புக் காரணமாகக் குரல் எழுப்புவோருக்கு வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமல்லரூபவ் மேற்கத்தேய நாடுகளிலும் ஆபத்து இருக்கின்றது என்பதற்கு அன்ஜலாவின் வாழ்க்கை நல்லொரு உதாரணம். இவர் அமெரிக்காவின் சிறை முறைமையை ""  எனவும் "prison-industrial complex"அடையாளப்படுத்துகின்றார். கைதிகள் என்பவர்களே உலகில் இருக்கக் கூடாது என்று கூறும் இவர் கைதிகள் என்பது அடிமைகள் என்பதின் இன்னொரு வடிவம்தான் என்றும் கூறுகின்றா
கறுப்பர் இனத்தைச் சேர்ந்த அன்ஜலா டேவிஸ் 1944ஆம் ஆண்டு அமெரிக்காவில் அலபாமா நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பாலர்பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றியதோடு   இலும் அங்கத்தவராக இருந்ததால் Southern Negro Congress கொம்ய+னிஸ்ட் கட்சியில் பாதிப்பு இவ்வமைப்புக்கு நிறம்பவேயிருந்தது. சிறுவயதிலிருந்தே இப்பாதிப்புகளோடு வளர்ந்தவர் அன்ஜலா. தனது மேற்படிப்பிற்காக நீய+யோர் நகரத்திற்கு சென்ற அன்ஜலாவுக்கு அங்கு இயங்கிக்கொண்டிருந்த கொம்ய+னிஸ் கட்சிகளின் வாரிசுளோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டதால் அவருக்கு சோசலிசம்ரூபவ் கொம்ய+னிஸத்தின் அறிமுகம் முழுமையாக அங்கே கிடைத்தது. தொடர்ந்து தனது மேற்படிப்பை மேற்கொண்ட அன்ஜலா ஒரு தீவிர பெண்ணியவாதியாகவும்ரூபவ் சமூகநலன்விரும்பியாகவும் கொம்ய+னிஸ்ட் கட்சியின் அங்கத்தவராகவும் இயங்கிவந்தார்.
1969ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளராக பணியாற்றி வந்த அன்ஜலாவைரூபவ் அன்று கலிபோர்னியாவின் கவர்னராக இயங்கிக்கொண்டிருந்த ரொனால்ட் ரேகன் பதவிநீக்கம் செய்தார். கொம்ய+னிஸ்ட் கட்சியின் அங்கத்தவராக அன்ஜலா இயங்கி வந்தததே அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான காரணம் என்று கூறப்பட்டாலும் கறுப்பு இனத்தைச் சேர்ந்த மாணவர்களும்ரூபவ் சமூகநலவிரும்பிகளும் அன்ஜலா கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதே காரணம் என்கின்றார்கள். இந்நாட்களில் அன்ஜலா கொலைமிரட்டல்களுக்கு உட்பட்டதனால் அவர் தற்பாதுகாப்பு வேண்டித் துப்பாக்கி ஒன்றையும் வாங்கி வைத்திருக்க நேர்ந்தது.
அன்ஜலாவின் வேலை ஒப்பந்தத்தை ஆளுனர்குழு புதுப்பிக்க மறுத்ததால்ரூபவ் அமெரி;க்க பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கம் அவர்களுக்கெதிராகக் கண்டம் தெரிவித்து வழக்குத் தொடுத்து அதில் வெற்றியும் கண்டது. அன்ஜலா மீண்டும் வேலையில் இணைந்து கொண்டார். இதனால் சினம் கொண்ட ஆளுனர் குழு மீண்டும் அன்ஜலாவை வேலை நீக்கம் செய்வதற்கான காரணங்களைத் தேடிக்கொண்டது. மீண்டும 1970ஆம் ஆண்டு அன்ஜலா பணிநீக்கம் செய்யப்பட்டார். அதற்கான காரணங்களாக அன்ஜலா முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தனது உரைகளில் மேற்கொண்டார்ரூபவ் அதனால் தாம் தாக்கப்பட்டதாக உணர்வதாக ஆளுனர் சபை கூறியது.
ஓகஸ்ட் மாதம் 7ம் திகதிரூபவ் 1970ஆண்டு கலிபோர்னியா நீதி மன்றத்தில் வைத்து நீதிபதி ஹரோல்ட் ஹலிரூபவ் அரசாங்க வழக்கறிஞர்ரூபவ் யூரி ஒருவர்ரூபவ் மற்றும் மூன்று கறுப்பு இன ஆண்களை சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இக்கொலைகளைச் செய்த 17வயது நிரம்பிய கறுப்பு இனப்பள்ளி மாணவன் உபயோகித்த துப்பாக்கியை வாங்கியது அன்ஜலா என்றும் அவர்தான் இக்கொலைச் செய்ய அந்த இளைஞனைச் தூண்டினார் என்றும் அன்ஜலா டேவிஸ் மேல் நீதிபதி ஹரோல்டினைக் கொலை செய்யத் தூண்டினார் என்ற குற்றம் பதிவாகி தலைமறைவாகிய அவரைக் கைது செய்வதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஓக்டோபர் மாதம் அன்;ஜலா கைதானார். அப்போது ஆட்சியிலிருந்த ஜனாதிபதி நிக்ஷன் மிகப்பெரிய பயங்கரவாதியான அன்ஜலா டேவிட்சைக் கைப்பற்றியதற்காக அமெரிக்கப் புலனாய்வுத் துறையைப் பெரிதும் பாராட்டினார். நீதிமற்றத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றம் அனைத்தையும் மறுத்தார் அன்ஜலா.



அன்ஜலாவைக் குற்றமற்றவர் என்று நம்பிய ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு விடுதலை இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அவர் விடுதலைக்காகப் போராடியதோடுரூபவ் அறுபதுக்கு மேற்பட்ட வெளிநாடுகளும் அன்ஜலாவை விடுதலை செய்யக் கோரிக் குரல் எழுப்பியதால் பதினெட்டு மாதச்சிறத்தண்டனையின் பின்னர் அனைத்து வெள்ளை இன ய+ரிகளால் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் குற்றமற்றவர் என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது.
தனது சிறை அனுபவம்தான் தன்னை அமெரிக்க சிறை முறைமைக்கு எதிராகப் போராடத் தூண்டியதின் முக்கியகாரணம் என் கூறும் இவர் சிறைத்தண்டனைகள் பற்றி ஆய்வுகளைச் மேற்கொண்டு பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார்.  அன்ஜலா டேவிஸ் தன்னை ஒரு சிறை முறைமைச் சீர்திருத்தவாதியாகக் அடையாளப்படுத்துவதிலும் பார்க்கத் தன்னை சிறை முறைமையை முற்றாக அழிக்க விரும்பும் ஒருவராகவே அடையாளப் படு;த்தவே விரும்புகின்றார்.
அமெரிக்காவின் சில மாநிலங்களில் இன்றும் வழக்கத்திலிருக்கும் மரணதண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றார். தற்போது பல பல்கலைக்கழங்களும் சிறப்புரையாற்றுவதற்கு இவரை அழைக்கின்றன. அன்ஜலா இன்றும் அனைத்து மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றார். பெண்கள் பெருமை படக்கூடிய ஒரு சிறந்த மனிதஉரிமையாளர் அன்ஜலா டேவிஸ். இவரது வாழ்வையும் கொள்கையையும் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு வெளியானது குசநந யுபெநடய னுயஎளை ரூயஅp; யுடட Pழடவைiஉயட Pசளைழநெசள எனும் இவ்விரணப்படம். கறுப்பு இனப் பெண்ணான அன்ஜலா டேவிஸ் தன்னால் முடிந்தவரைக்கும் சிறைக்கைதிகளுக்காகக் குரல் கொடுத்தாலும்ரூபவ் அவரோடு இணைந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் சிறைத்தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை மிகமிகப் பெரிய அளவில் இருந்துகொண்டுதானிருக்கின்து. குறிப்பாக குவாண்டனாமோவின் தடுப்பு முகாமில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்றும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்.