Wednesday, October 17, 2012

அட்டக்கத்தி




தமிழ் சினிமாவின் வடிவத்தை மாற்றியமைத்துரூபவ் இதையெல்லாம் கூட ரசிக்க முடியுமென்று சினிமாவில் தனது காலடி பதித்தவர் இயக்குனர் பாரதிராஜாரூபவ் அதன்பின்னர் அவரைத் தொடர்ந்து கிராமங்களின் அழகையும்ரூபவ் அழுக்கையும் படம்பிடித்துக் காட்டப் பலநல்ல இயக்குனர்கள் வந்துவிட்டார்கள் என்பது வேறுகதை. இருந்தும் சினிமா என்பது சிலரால் மட்டுமே முடியக்கூடியது என்பதாய்ப் பொதுமக்களிலிருந்து மிகவும் தூரத்திலேயே பல ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அதுவும் தகர்க்கப்பட்டு தொழில்நுட்பம் இலகுவாகவும்ரூபவ் பொருளாதார ரீதியாக இயலக்கூடியதாகவும் மாறிவிட்டதனால் தமது மாறுபட்ட சிந்தனையோடும்ரூபவ் செயல்திறனோடும் பல இளைஞர்கள் சினிமாவைத் தம் வசமாக்கிக்கொண்டிருக்கின்றார்கள். ஆடம்பரமும்ரூபவ் அதிஜனரஞ்சகமுமின்றி குறைந்த பணச்செலவில் இயக்கப்படும் திரைப்படங்கள் தற்போது திரையரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பது தமிழ்நாட்டு இளைஞர்களை இன்னும் ஊக்கத்திற்குள்ளாக்கி வருகின்றது. அந்த வகையில் அண்மையில் வெளியான இன்னொமொரு சக்கைபோடு போடும் திரைப்படம்தான் “அட்டக்கத்தி”.




அறிமுக இயக்குனர் பா.ரஞ்சித். நாயகனும்ரூபவ் நாயகியும் புதுமுகங்கள். இப்படிப் புதுசுகள் ஒன்று சேர்ந்து பேசப்படும்படியாக ஒரு திரைப்படத்தைத் தருவதென்பது தற்போது தமிழ்நாட்டுச் சினிமாவிற்கு ஒன்றும் புதிதல்ல. “போர்மிலா” திரைப்படங்களைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன மக்கள் மனதிற்கு மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்பதை “அட்டக்கத்தி” போன்ற மிக இயல்பான திரைப்படங்கள் வெற்றி பெறுவதிலிருந்து அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

ஒரு கிராமத்தைச் சுற்றி அதன் குணாம்சத்தை மையப்படுத்தி வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் சீனு ராமசாமியின் “தென்மேற்குப் பருவக்காற்று”. அதே போல் அட்டக்கத்தி திரைப்படத்தின் திரைக்கதை படத்தின் நாயனைச் சுற்றியும் அவனது குணாம்சத்தை மையப்படுத்தியும் அமைக்கப்பட்டிருக்கின்றது. திரைப்படமென்றால் நாயகனின் நேர்மறையான குணாம்சங்களே வெளிப்படுத்தப்படல் வேண்டும் என்றொரு சினிமாக்காலமும் இருந்தது. எதிர்மறைக் குணாம்சங்களை ஒருவன் கொண்டிருந்தால் அவன் திரைப்படத்தில் வில்லனாக மட்டுமே தோன்றமுடியும். எதிர்மறைக் குணாம்சத்தைக் கொண்ட ஒருவன் திரைப்படத்தின் கதாநாயகனாகத் தோன்றும் பட்சத்தில் படத்தின் இறுதியில் அவன் இறந்து போவான்ரூபவ் இல்லை திருந்திவிடுவான். இதுதான் தமிழ் சினிமாவின் பல ஆண்டு போர்மிலாவாகவிருந்தது. இந்த போர்மிலாவைக் கடந்து வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் இயக்குனர் சற்குணத்தின் “களவாணி” மிக இயல்பாக ஆர்ப்பாட்டமின்றி ஒரு இளைஞனின் தனித்தன்மையை மையப்படுத்தி அவனது வாழ்வைச் சொல்லிச் சென்றது அத்திரைப்படம். அதே போன்று சதாரணமாகச் சென்னையில் சந்திக்கக் கூடிய சென்றைப்புற நகரில் வாழும் ஒரு இளைஞனின் கதையை அவன் மொழியிலேயே சொல்லி நிற்கின்றது “அட்டக்கத்தி”. அனைத்து மனிதருக்குமே ஒரு தனித்தன்மையான குணாம்சம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அதனை உன்னிப்பாகக் கவனித்துக் கலப்படமின்றிச் செதுக்கி கலைவடிவத்தில் கொண்டு வருவதென்பதுதான் ஒரு சிறந்த கலைஞனின் சிறப்பம்சம். அந்த வகையில் இயக்குனர் ரஞ்சித் மிகவும் நேர்த்தியாகப் பாத்திரங்களை வடிவமைத்திருக்கின்றார்.
ஒரு பெண் தன்னைப் பார்த்துச் சிரித்துவிட்டால் அவள் தன்னைக் காதலிப்பதாகக் கற்பனை பண்ணுவதும்ரூபவ் அவளுக்காக வழிவதும்ரூபவ் அவள் பின்னால் சுத்துவதும்ரூபவ் பின்னர் அவள் தன்னைக் காதலிக்கவில்லை என்று தெரிந்த பொது அதற்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அடுத்துத் தன்னைப் பார்த்துச் சிரிக்கும் பெண்ணிற்குப் பின்னால் அதே சிரிப்பும்ரூபவ் வழிதலும்ரூபவ் பெண்களோடு கதைக்க முயலும் போது தடுமாறும் அவரின் கொன்னைதட்டும் தடுமாற்றமுமென்று புதுமுக நாயகனின் நடிப்பு மிகவும் யதார்த்தம். அவன் நண்பர்கள் அனைவரும் தங்களுக்குத் தருந்தாற்போல் ஒருத்தியைக் காதலித்துக்கொண்டிருக்கும் போது தன்னை மட்டும் ஒருத்தியும் லவ் பண்ணுகின்றாள் இல்லையே என்று திடீர் ஞானம் வந்து பெண்கள் பக்கம் திரும்பியும் பார்க்கப் போவதில்லை என்ற முடிவோடு காலேட்ஜிற்குள் நுழைவதும்ரூபவ் பள்ளிக்காலத்தில் தான் காதலித்துரூபவ் அவளால் அண்ணா என்று கூறி நிராகரிக்கப்பட்ட பெண் அதே காலேட்ஜிற்கு வந்து அவனோடு சகஜமாகப் பழகத் தொடங்க விட்ட இடத்திலிருந்து தன் காதலைத் தொடராலாம் என்ற எண்ணத்தோடு அசட்டுத்தனமாக மீண்டும் தனது அதே வழிதலைத் தொடங்கிக் குப்புற விழுகின்றார் கதாநாயகன். ஒருவனின் குணாம்சம் ஒருபோதும் மாறப் போவதில்லை என்பதை “அட்டக்கத்தி” அழகாகக் காட்டியிருக்கின்றது.




சென்னைவாழ் இளைஞர்களின் நாளாந்த வாழ்க்கை முறையை மையமாகக்கொண்டும்ரூபவ் சென்னைத்தமிழ் என்றால் வெறும் கேலி மொழியாகவே இதுவரையும் தமிழ் சினிமாவின் காட்டப்பட்டிருக்கின்றதுரூபவ் ஆனால் அம்மொழிபெண்களுக்கு இப்படத்தில் அதிகம் இடமில்லையென்றாலும் அட்டக்கத்தியால் காதலிக்கப்படும் அத்தனை பெண்களும்ரூபவ் தமக்குக் கிடைத்த சொற்ப நேரங்களை முறையாகப் பயன்படுத்தி தம்மை அடையாளப்படுத்தியிருக்கின்றார்கள். இவற்றை விட அட்டக்கத்தியின் குடிகாறத் தகப்பன்ரூபவ் அவரை அதட்டி உருட்டி அன்பு காட்டும் அட்டக்கத்தியின் தாயார் என்று எவருமே நடிப்பில் செயற்கைத் தனமில்லாமல் திரைப்படத்தை சோர்வின்றிக் கொண்டு செல்ல உதவியிருக்கின்றார்கள். படத்;;தில் ஓரிரு சண்டைக் காட்சிகள் இருந்தாலும் கதையோடு ஒத்துப் போவதால் செயற்கைத் தனமற்றிருக்கின்றது. அதேபோல் ஆடம்பரப்பாடல் காட்சிகளற்று ஒரு தமிழ்சினிமா திரையரங்கிற்கு வந்து மக்களின் மனதில் இடம்பிடிக்கலாம் என்பதையும் அட்டக்கத்தி திரைப்படம் நிரூயஅp;பித்திருக்கின்றது. மொத்தத்தில் தமிழ் சினிமா என்பது மக்களோடு மக்களாகக் கலந்துவிட்டதென்று கூறலாம். 

No comments: