துண்டிக்கப்பட்ட என் கையிலிருந்து
துளிர்த்தெழுந்தது
சின்ன வயதில்
நான் விழுங்கிய புளியங்கொட்டை
என்னுடலென
ஆரத்தழுவியதை நீரூற்றி வளர்க்க
விருட்சமானது
புழு, பூச்சி, பறவைகள், மிருகங்களென
அனைத்தும்
அடைக்கலம் கொண்டன என்னுள்
மிரண்ட அவர்கள்
மீண்டும் வெட்டினர்
என் அடுத்த கையையும்
நான் விழுங்கிய வேம்பங்கொட்டை வீறுகொண்டெழுந்தது
என் வயிற்றுக்குள்
இன்னும் அடைந்து கிடக்கின்றன
பல விதைகள்
விரைவில் நானொரு காடாவேன்.
04/29/2021
No comments:
Post a Comment