Saturday, March 6, 2021

<அவையள்>

 செத்தாலும் 

<அவையளை>

வீட்டுக்க அடுக்கன்,

<மசிர> என்னை

யாரெண்டு தெரியுமோ?


பக்கத்து வீட்டிற்கும் 

வந்திட்டாங்களாம் ஊரில, 

வெளிநாட்டிலையும் 

<அவைக்கு>

சொந்தங்களிருக்காம்.


பாழாய்போன லண்டன்காறர்

விசாரிக்காமல் வித்ததால

நம்மூரினி

நாறத்தான் போகுது.


போருக்குப்பிறகு

யாரெண்டும் தெரியேல்லை

புதுசு, புதுசா

ஊருக்க அலையினம்.


மேல் வீடும் கட்டி,

கழுசானும் போட்டு

புறியத்தோட ஊரெல்லாம்

சுத்தி திரியினம்.

கையிலும் மின்னுது, 

கழுத்திலும் மின்னுது

பெட்டைகளும் பத்தாததுக்கு

<ரூவீலர்>  ஓடுது.


உண்டியல் குலுக்கி,

சுத்துமதில் கட்டி

கோயிலையேனும்

காப்பாத்திட வேணும்.


செத்தாலும் 

<அவையளை>

வீட்டுக்க அடுக்கன்

கனடாவில

கக்கூசை

நான்தான் கழுவுறன்.


06-03-2021

No comments: