செத்தாலும்
<அவையளை>
வீட்டுக்க அடுக்கன்,
<மசிர> என்னை
யாரெண்டு தெரியுமோ?
பக்கத்து வீட்டிற்கும்
வந்திட்டாங்களாம் ஊரில,
வெளிநாட்டிலையும்
<அவைக்கு>
சொந்தங்களிருக்காம்.
பாழாய்போன லண்டன்காறர்
விசாரிக்காமல் வித்ததால
நம்மூரினி
நாறத்தான் போகுது.
போருக்குப்பிறகு
யாரெண்டும் தெரியேல்லை
புதுசு, புதுசா
ஊருக்க அலையினம்.
மேல் வீடும் கட்டி,
கழுசானும் போட்டு
புறியத்தோட ஊரெல்லாம்
சுத்தி திரியினம்.
கையிலும் மின்னுது,
கழுத்திலும் மின்னுது
பெட்டைகளும் பத்தாததுக்கு
<ரூவீலர்> ஓடுது.
உண்டியல் குலுக்கி,
சுத்துமதில் கட்டி
கோயிலையேனும்
காப்பாத்திட வேணும்.
செத்தாலும்
<அவையளை>
வீட்டுக்க அடுக்கன்
கனடாவில
கக்கூசை
நான்தான் கழுவுறன்.
06-03-2021
No comments:
Post a Comment