Saturday, March 6, 2021

கார்டினல்

 மீண்டும் என்னை

எதற்குள்ளாவது

செருகிவிட முனைகின்றார்கள். 


விரிந்த கைகளோடு

காற்றில் கலந்து 

புயல், மழை, வெயில் 

கடந்து 

பனிக்குள் கிடக்கின்றேன்.


வெய்யில் பொசுக்கி 

சாம்பலாகவில்லை

புயலில் சிக்குண்டு

முறிந்தும் விழவில்லை.

பனியிலும் புதைந்திடேன்.


புதருக்குள் மறையா கார்ட்டினல் நான். 

அவதானம்!

கண்களை மறைத்து

கண்காணித்து வருகிறேன்

பட்டென்றொருநாள்

கொத்திவிட்டுப் பறப்பேன்.


04-03-2021

No comments: