எழுத்துக்களின் மேல் சேற்றையிறை
பதாகைகளைப் பிடுங்கி காலால் நசி
வேஷம் என்று
போர்வை என்று
போலி என்று
பிணைந்த கைகளை வாளாலறு
போதவில்லையா?
வெட்டியொட்டி
நீலப்படமும் வெளியிடு
இப்போது
பட்டத்தின் கயிறு
உம்மிடமில்லை
எங்களிடம்தான்
கற்றை மயிருக்குள்
சுருண்டு கிடக்கும்
உம் ஆண்குறி விறைப்பெடுத்தாலும்
எம் ஒற்றை மயிரையும்
புடுங்கிடமுடியாது.
No comments:
Post a Comment