Wednesday, March 31, 2021

பெண்ணியவாதி



எழுத்துக்களின் மேல் சேற்றையிறை

பதாகைகளைப் பிடுங்கி காலால் நசி

வேஷம் என்று

போர்வை என்று

போலி என்று

பிணைந்த கைகளை வாளாலறு

போதவில்லையா?

வெட்டியொட்டி

நீலப்படமும் வெளியிடு


இப்போது

பட்டத்தின் கயிறு

உம்மிடமில்லை

எங்களிடம்தான்

கற்றை மயிருக்குள்

சுருண்டு கிடக்கும்

உம் ஆண்குறி விறைப்பெடுத்தாலும்

எம் ஒற்றை மயிரையும்

புடுங்கிடமுடியாது.

No comments: